Wednesday, December 29, 2010
கலைத்தந்தை-பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
Tuesday, December 28, 2010
Monday, December 27, 2010
புரட்சி தலைவர் பொன்மனசெம்மல் அவர்கள் தியாகராசர் கல்லூரிக்கு சுழற்கோப்பை ஒன்றை வழங்கினார்கள். ஆண்டு தோறும் கல்லூரிகள் இடையே நாடகப் போட்டியினை நடத்தி வெற்றி பெறும்நாடகக்குழுவிற்கு அச்சுழல் கோப்பையை வழங்க சொன்னார்கள்.பிரகாசம் எழுதிய மாண்டவன் மீண்டான் நாடகம் தியாகராசர் கல்லூரிக்கு சுழல் கோப்பையை பெற்றுத் தந்தது. சாலமன் பாப்பையா அவர்கள் தந்தையாகவு ம இளமுருகன் மகனாகவும் நடித்தனர்.
கலைத்தந்தை க்கு கோவில் கட்டும் அளவிற்கு அகில இந்திய ஆலை முதலாளிகள் பயன்பெற்றனர். ஆயிரம் பிரச்னைகள் பற்றித்தான் என ஆனந்த விகடன் தனது மதுரை மாவட்ட மலரில் எழுபதில் குறிப்பிட்டு இருந்தது. குடும்பங்களில் சந்ததிகளிடம் மரபணுக்கள் வழியாக சில அபூர்வ பண்புகள் நீடித்து நிலவி வருவதாக நவீன விஞ்ஞான ம கூறுகின்றது. கருமுத்து தியாகராசரின் குணநலன்களை அவரது மகன் கருமுத்து கண்ணனிடம் காணலாம்.
பழமுதிர்சோலையில் முருகன் படை வீட்டினை மீண்டும் அமைக்க மேற்கொள்ள ப்பட்ட முயற்சிகளை கலைத்தந்தை வரவேற்றார்கள். அறநெறி அண்ணல் பொன்னம்பலம் தியாகராசன் அவர்களது கூட்டு முயற்சி . சிவன் ஆசாரி சண்முகசுந்தரம் மீயன்னசாம்பசிவனார் ஆகியோர் உடன் இருந்தனர்.
பெரிய தொழில் அதிபர்களில் தியாகராசச்செட்டியார் ஒருவர் தான் தம் தொழிற்சாலைக்குள் வீடு கட்டி வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.தொல்காப்பியம் உள்பட பல நூல்கள் வெளிவர பொருள் உதவி செய்தார். இராஜாஜி எழுதிய திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பினை திருவள்ளுவர் கழகத்தில் வெளியிட்டார்கள்.
Sunday, December 26, 2010
தொலைவில் வரும் நபர் அணிந்திருக்கும் சட்டை வேட்டி இன்னின்ன நூலில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லும் ஆற்றல் பெற்றவரும் தனது தந்தைக்குப்பின்னர் தன்னை வளர்த்து ஆளாக்கிய அருணாசல செட்டியார் அவர்கள் மகன் தியாகராசன் அழகப்பன் மருமகன் சேதுராமன் ஆகியோர்க்கு தனது ஆலையில் உயர் பதவிகளை நன்றிக்கடனாக வழங்கினார்.
தேவிகுளம் பீர்மேடு எல்லைப்போராட்டத்தை சக்கரவர்த்தி இராசாசி ஜீடிநாயுடு பி .ட்டி .இராசன் ஆகியோர்களுடன் முன்னின்று போராடினார். தொழிலதிபர்களில் அவர் ஒருவரே இப்படி செயல்பட்டவர்.
ஆத்திக்காடு தெற்கூரில் திண்ணை ப பள்ளிக்கூடத்திலும் மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலும் இலங்கையில் செயின்ட் தாமஸ் கல்லூரியிலும் படித்தார்கள். மார்னிங் லீடர் ஆங்கில நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்கள். சென்னை இராசதானியின் ஆளுநராக இருந்த பென்லாண்டு பிரபுவிற்கு இலங்கையில் நகரத்தார்குநேர்ந்த சிக்கல்களை குறித்து எழுதிய கடிதம் இன்றும் சென்னை எழும்பூரில் ஆவணக் காப்பகத்தில் பேணப்பட்டு வருகின்றது.
Saturday, December 25, 2010
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூர்ர் கருமுத்து தியாகராசர்
உலகெங்கிலும் வாழுகின்ற மறைந்த தொழிலதிபர்களிடம் உணர முடியாத மெச்சத்தகுந்த குணநலன்கள் பலவற்றினை கருமுத்து தியாகராசரிடம் காணலாம்.
தியாகராசர் பொறியியல் கல்லூரிபொன்விழா ஆண்டு விழாவில் சொற்பொழிவு ஆற்றிய முதல்வர் டாக்டர் கலைஞ் ர அவர்கள் சோனியா வழியில் மகளிர் நடக்க கே ட்டுக்கொண்டார். கருமுத்து தியாகராசர் மறைந்த பொழுது கலைஞர் அவர்கள் எதிர்க்கட்சி த தலைவர். தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டார் என்ற செய்தியினை தமிழ்நாடு இதழ் வெளியிட்டது.
Sunday, December 19, 2010
அன்னை வாழி வேண்டான் என்ற தொடக்க சொற்களை கூறவே அன்று அந்நிலையில் யான் தடுமாறினேன். அவரொஅ நூற்றைம்பது அடிகள் வரை அப்பாட்டினை ஒப்பித்து கொண்டே போனார், உரைவேந்தர் அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை , மொழிக்காவலர் சி.இலக்குவனார் எல்லோரும் வியந்த படி
கலைத்தந்தை _ தமிழண்ணல்
நாம் நல்ல நல்ல நூல்களைத் தேடிப் படிக்கின்றோம் . அதைப்போல நல்ல திறமை வாய்ந்த மனிதர்களையும் படிக்கவேண்டும். நூல்களை ப படிப்பது போலவே மனிதர்களையும் படிப்பதும் மேலானது. மிகவும் பயனுள்ளது. கலைத்தந்தையின் வாழ்க்கை அவ்வாறு படிக்கத்தகுந்த ஒன்று என்பதே அந்நினைவாகும்.
கலைத்தந்தை அவர்களால் அன்று ஒருநாள் காலையிலும் மாலையிலும் இருமுறை நேர்முகப்போட்டி செய்யப்பெற்று தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனவன் யான். எனக்கென்று எவ்விதப்பரிந்துரையும் இல்லை.
Saturday, December 18, 2010
இருந்த பொழுது என்னை சிக்கனக்காரன் என்று கேலி செய்வார்கள். உதாரணத்திற்கு மேலை நாட்டில் மோட்டார் கார் வாங்கும் நோக்குடன் கஞ்சன் ஒருவன் பழைய காரை பார்வையிட்டு கொண்டிருந்தான் . அப்பொழுது அவன் இந்த கார் அதிக பெட் ரோல் குடிக்குமா என்று வினவினான்.
சீரிய தெய்வப்பக்தியும் சுத்த சைவ உணவும் மது அருந்தாமையும் விரதமாக பூண்டு ஒழுகியவர் . வெளிநாட்டவர் வந்து அவருடன் தங்கும் பொழுதும் விருந்துகளில் சைவ இனிய எளிய அமுது உணவை படைத்தது உபசரிப்பார். அவர்களும் அப்புதுமையான உணவை விரும்பி உண்பார்கள். பொருள் செறிந்த உரையாடல்களில் அவர்களின் மது அருந்தும் பழக்கத்தையும் கூட அச்சுவாரச்யத்தில் மறந்து விடுவார்கள். அவர் மனதிற்கு நியாயமெனத தோன்றி விட்டால் அச்சமின்றி அரசாங்கம் என்றாலும் சட்ட ரீதியாக எதிர்த்து போராடி வெற்றியும் கொள்வார்.
அன்புடன் பேசிப்பழக்கப்பட்டவர் . நம் போன்றவர்கள் அவரைக்கண்டு பேச அவரில்லத்திற்கு சென்றால் முதலில் உட்காரச்சொல்லிவிட்டுத்தான் மற்ற யாவையும் பேச ஆரம்பிப்பார். மிகவும் எளிமையான அடக்கமான வாழ்க்கையை மேற்கொண்டவர் . ஆடைகள் முதலான நடை உடை பாவனைகளிலே இது நன்கு புலனாகும்.
எனது சிந்தனையில்....
எனது சிந்தனையில் ஸ்ரீ கருமுத்து தியாகராஜன் செட்டியார் சி.வே.ரெங்காச்சாரி
சிறு மின்பொறி போன்று ஜீவாணுவாக தோற்றமேடுக்கும் சீரிய் எண்ணங்களே நாளடைவில் கருவென வளர்ந்து உருவெடுத்து நுட்ப யந்திரமய தொழிற்புரட்சியை ஏற்படுத்தும் சாதனையாக அமைகின்றது.
அத்தகைய மேதைகள் சிலரில் ஒருவரே தவப்புதல்வரான ஸ்ரீ கருமுத்து தியாகராஜன் செட்டியாராவார்கள். அன்னாருடைய தொழில் நுட்ப ஆர்வமும் ஊக்கமுமே பெருங்கொண்ட நூற்பு ஆலைகளையும்சர்க்கரை ஆலைகளையும் நஷ்டஈட்டு காப்பு நிலையம் , வங்கி செய்தித்தாள் பிரசுரம் மற்றும் பொறியியல் கலைக்கல்லூரிகள் நமக்கு ஈந்து தந்துள்ளது.