Sunday, December 19, 2010

அன்னாரின் தாராள குணத்திற்கு இன்னுமொரு உதாரணமும் சொல்வேன் . எனக்கு எகிப்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது. அதை செட்டியார் அவர்களிடம் காட்டி அவருடைய அபிப்ராயம் தெரிய விரும்பினேன். அவர்கள் கூறினார்கள். நீயும் தம்பி மாணிக்க வாசகமும் இருவருமாக போய் வாருங்கள் என்றார். அதன் பயனாக எகிப்து நாடு மட்டுமின்றி கிழக்கு ஆப்பிரிக்கா சூடான் ஐரோப்பாவில் யாவற்று நாடுகள் நாங்கள் இருவரும் நான்கு மாதங்கள் சுற்றுப்பயணம் முடித்து கொண்டு திரும்பினோம், அதே போல் நான் தனியாக மற்றுமொருமுறை மேலை நாட்டு வழியாக அமெரிக்காஹவாய் ஜப்பான் ஹாங்காங் சிங்கப்பூர் மலேயா பினாங்கு சென்று உலகத்தையே சுற்றி வரும் நல்வாய்ப்பு எனக்கு கிட்டியதென்றால் அவருடைய அளவிட முடியாத தாராள மனமும் தயாள சுபாவத்தையும் நிருபிக்கின்றது அல்லவா.

No comments:

Post a Comment