Sunday, December 26, 2010

ஏசாசிறப்பின் இசை விளங்க பெருங்குடி என்று இளங்கோவடிகளும் மானமிகு தருமத்தின் வழிவந்த ஊனமில் சீர்பெருவணிகர் என்று சேக்கிழாரும் சிறப்பாகப் பாடியுள்ள நகரத்தார் குலத்தில் ஆ.தெற்கூரில் முத்துக்கருப்பன் செட்டியார் - வினைதீர்த்தான் ஆச்சி தம்பதி யருக்குபத்தாவது பிள்ளையாக கருமுத்து தியாகராசர் பிறந்தார்.
ஆத்திக்காடு தெற்கூரில் திண்ணை ப பள்ளிக்கூடத்திலும் மதுரையில் சேதுபதி உயர்நிலைப்பள்ளியிலும் இலங்கையில் செயின்ட் தாமஸ் கல்லூரியிலும் படித்தார்கள். மார்னிங் லீடர் ஆங்கில நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்கள். சென்னை இராசதானியின் ஆளுநராக இருந்த பென்லாண்டு பிரபுவிற்கு இலங்கையில் நகரத்தார்குநேர்ந்த சிக்கல்களை குறித்து எழுதிய கடிதம் இன்றும் சென்னை எழும்பூரில் ஆவணக் காப்பகத்தில் பேணப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment