Monday, December 27, 2010

மதுரைத்திருவள்ளுவர் கழகத்தில் சிலப்பதிகாரம் பற்றிய சொற்பொழிவினை கந்தசாமிப்பிள்ளை அவ்வை சு.துரைசாமிப்பிள்ளை அறநெறி அண்ணல் முன்னிலையில் கலையன்னை சொற்பொழிவு ஆற்றினார்கள். திருவாசக ஆய்வு நூலை கலையன்னை வெளியிட்டார்கள். கம்பர் சமாதியிருக்கும் நாட்டரசங் கோட்டையில் இளங்கோவும் கம்பரும் என்கின்ற தலைப்பினில் சிலம்புஸ் செல்வர் ம.போ.சி. முன்னிலையில் கலையன்னை நிகழ்த்தினார்கள்.
பெரிய தொழில் அதிபர்களில் தியாகராசச்செட்டியார் ஒருவர் தான் தம் தொழிற்சாலைக்குள் வீடு கட்டி வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.தொல்காப்பியம் உள்பட பல நூல்கள் வெளிவர பொருள் உதவி செய்தார். இராஜாஜி எழுதிய திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பினை திருவள்ளுவர் கழகத்தில் வெளியிட்டார்கள்.

No comments:

Post a Comment