முடியும் என்று சொல்லியே முடித்து விட்டார்களே
நெஞ்சு இருக்கும் வரைக்கும் உன் நினைவு இருக்கும்
நாங்கல்லாம் என்று கூறி நீங்கி விட்டாய்
அழுகின்ற கண்ணீர் கொதிஉள்ளம் தனை குளிர்விக்குமா
ஏட்டில் எழுதி வைத்தேன் அழுத்தியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமட இறைவா கூட்டி சென்ற இடம் ஏதடா
துன்பத்திலே ஒரு சொல்லினை சொல்லி சிரிக்க செய்திடுவாய்
பாண்டியம்மா பெத்த பிள்ளை பாண்டிநாடு புகுந்த தம்மா
உறைவிடம் தந்த மகள் உறைந்து போனதம்மா
உடை எடுத்து தந்த மகள் உள்ளத்தை உடைத்ததம்மா
உணவு தந்த மகள் உலகை விட்டு மறைந்ததம்மா
Sunday, December 25, 2011
கீதாவிற்கு அஞ்சலி
விழிகளில் கண்ணீர் மல்க வழியெல்லாம் உந்தன் சிந்தனை
ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாய்
அல்லும் பகல் காத்திருந்து பறி கொடுத்தோம்
தட்டிப்பறித்து விட்டாரே சஞ்சலம் கொள்ள வைத்தாரே
நினைவாலே கவி எழுதி உனக்காக வைத்தேன்
மறு பிறவி எடுத்து வா மருமகளே
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
தாய் கொண்டு வந்ததை நோய் கொண்டு போன தோ
கடிந்து ஒரு சொல் சொல்லியதில்லை அதனால்
ஒடிந்து போனது எங்கள் மனம் அறிவாயா
ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தாய்
அல்லும் பகல் காத்திருந்து பறி கொடுத்தோம்
தட்டிப்பறித்து விட்டாரே சஞ்சலம் கொள்ள வைத்தாரே
நினைவாலே கவி எழுதி உனக்காக வைத்தேன்
மறு பிறவி எடுத்து வா மருமகளே
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
தாய் கொண்டு வந்ததை நோய் கொண்டு போன தோ
கடிந்து ஒரு சொல் சொல்லியதில்லை அதனால்
ஒடிந்து போனது எங்கள் மனம் அறிவாயா
Tuesday, December 20, 2011
குடல் இரைப்பை நோயா
ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்னைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள். விபரங்கட்கு 9688994522
Subscribe to:
Posts (Atom)