Wednesday, December 12, 2012

குணநலன்கள்
  காலந்தவறாமை  அவருடைய சிறந்த பண்பாடுகளில் ஒன்றாகும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும்  குறித்த  நேரத்தில் முடிப்பது  அவருடைய
பழக்கமாக இருந்தது.  காலத்தைப பொன் போல கருதி போற்றியவர் அவர். காலம் தவிர்ப்பவர்களைக்  கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது.  அதை ஒரு ஒழுக்ககேடாக  நினைப்பவர் அவர்.
     கடுஞ் சொல் இன்மை.  என்பது அவருடன் பிறந்ததாகும். யாரிடமும் எந்தச்சந்தர்ப்பத்திலும்  அவர் கடுமையான  சொற்களைக்  கையாண்டது கிடையாது.  தவறு செய்பவர்களை த்திருத்தும் வகையில் மென்மையான  சொற்களால்  ஆனால்  உறுதியுடன் தமது கண்டனத்தை  அவர் தெரிவிப்பார். கேட்பவர்கள்  அதிலே நொந்து போவார்கள்.  இனி ஒரு முறை  இத்தகைய தவர்ரைஸ் செய்யக்கூ டாது  என்ற உணர்வை அந்தக் கணமே  அவர்கள் பெறுவார்கள். 

No comments:

Post a Comment