Thursday, December 6, 2012

வள்ளல் மனம் என்கின்ற
வானத்தை அளவெடுக்க த்
தெரியாமல் திகைக்கின்றோம் 

.  தும்பைப் பூப போன்ற ஆடை
    தூய்மையே நிறை ந்த உள்ளம் !

   இவருடைய நெற்றியிலே
   இறைச்சின்னம் ....
  நெஞ்சினிலே தமிழ்ச்சின்னம்
   அண் ண லிவர்  வெற்றியிலே
   உண்மையெனும் விழுச்சின்னம்.

    உலகமனிதர்களில் -இவர் ஓ
    உலோக  மனிதர்
    தங்கம் இவருடைய
   நெஞ்சுக்குள் தங்கும்
   வெள்ளி தலை மீது வீற்றிருக்கும்
  ஆமாம் !
  நரை
 காலம் இவர் தம் தலைக்கு ச
 சூட்டிய கௌரவ  வெள்ளிக்கிரீடம் !
 உலக மனிதர்களில் _இவரொரு
  உலோக மனிதர்.
  இவர்
 இனிய பண்பில் எதுகை மோ னை
 ஒழுக்கத்துரையாய்  உயர்ந்த வெண்பா

வெள்ளைத் தாமரையை விட்டெழுந்து
கலைமகள் இவருடைய
உள்ளத்தாமரையில் இடம்கேட்டாள்.
      விருந்தோம்பல்
தமிழ்த்தொண்டும் மதத் தொண்டும்
பூமியிலே செய்யும் புறத் தொண்டு ...
வயிற்றுக்கு செய்யும் வளமான தொண்டுதான்.
அன்பர்கட்கு செய்யும் அறத்தொண்டு
அதனால் தான்
உணவை அமுதென்று ஓதுகின்றார்கள்.
அற நெறி  அண்ணல் -ஓர்
   அமுதநநூல  கம்
ஆயிரமாயிரம்
வயிறுகள் .. அதன்
வாசகர்கள்.
 இவருடைய

படைப்புக்களை ருசித்து ப படிக்கும்  
வயிறு களில் ஆங்காங்கே
புடைப்புகள் தெரியு,ம்.
 ஊ சியைப்போல ஒல்லியாய்
இருப்பவர்க்கும் இவர் வீட்டு ப
பந்தியில் உட்கார்ந்தால்
தொந்தி விழும்.
 விருந்தும் மருந்தும் மூ ன்று நாள் என்பார்கள்.
முப்பது நாள் இருந்தாலும் _இவ்ர்வீட்டு
விருந்து குறையாது.

No comments:

Post a Comment