Tuesday, December 11, 2012

உறவினர்களின்  வரவால் எங்கள் வீடு நிறைந்து இருந்தது. எங்கள்  தந்தையாரைக் காண வரும் தமிழ் அறிஞர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்று விருந்தோ மபும் பண்பினை எங்கள் அன்னையார் இயற்கை யாகவே பெற்றிருந்தார்.
        எங்கள் தந்தையாரின்   மனைத்தக்க மாண்புமிக்க மனையாட்டியாக  வாழ்ந்த எங்கள்  அன்னையார் வாழ்வரசியாக  எங்கள்  எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு  மறைந்தார. . அப்பொழுது நாங்கள் எல்லோரும்  சிறிய பிள்ளைகள். ஆனாலும் எங்கள் அன்னையார் மறந்த பின்னர்  நண்பர்களும் உறவினர்களும்  எவ்வளவோ வற்புறுத்தியும் கூ ட எங்கள் தந்தையார  மறுமணம் செய்து கொள்ள ப பிடிவாதத்துடன் மறுத்து விட்டார். எங்களுடைய  எதிர்கால நல்வாழ்விற்காக தியாக வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள்.

No comments:

Post a Comment