Monday, December 10, 2012

சமுதாயத்தொண்டு
     எங்கள் தந்தையாருக்கு அரசியல்  துறையில்  அவ்வளவு நாட்டம் இல்லை . என்றாலும்  அவருடைய இளம்பிராயத்து நண்பர்கள் பலரும் அரசியல் துறையில் ஈடுபட்டவர்களாக இருந்தார்கள். காலஞ் சென்ற பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என் தந்தையாரின் இளம்பருவத்து நண்பர்கள். காந்தியத்தொண்டர் எ.என்.இராசன்  என் தந்தையாரின் இளம் பருவத்து நண்பர் . அவரின் தமையனாரும் முன்னாள் மதுரை நகரவைத்தலை  வருமான
 (திரு) எ.சிதம்பரநாத முதலியார் . தியாகி .ரெ . சிதம்பரபாரதியார் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும்  எங்கள் தந்தையாருடன் நட்புறவு கொண்டவர்களாக வாழ்ந்தார்கள். எனது தந்தை என் பாட்டனாருக்கு ஒரே
பிள்ளை யாக  இருந்த காரணத்தால் சுதந்திர போராட்டத்தில் நேரிடையாக ஈடுபடமுடியவில்லையே த தவிர க் காந்தியடிகள் மீதும் தேசிய இயக்கத்தின் மீதும் அவருக்கு இருந்திருந்த ஈடுபாட்டினை யாராலும் அளவிடமுடியாது. இளம் பருவத்தில் இருந்து  இதுவரை தூய காதர் ஆடை அணிவதையே விரதமாக கே கொண்டிருக்கிறார். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் பல்வேறு வகையிலும் உதவி செய்தார்.
      தமிழரசுக் கழகத்தினை ச சிலம்புச்செல்வர்  திரு,ம.பொ .சி வஞா னம
அவர்கள் தொடங்கிய போது ,அக்கழகத்தின் மதுரை நகரத்தலைவராக  விளங்கினார். கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக அவர் விளங்கினாலும்  கட்சித்தலைவர்களுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்பு நட்பும் தோழமையும் இருந்தது. பெரியார் , ஈ.வே.ரா. இராஜாஜி , பெருந்தலைவர் காமராசர் திரு.எம்.பக்தவத்சலம் ,கம்யூனிஸ்டு த்தலைவர் பி.இராமமூர்த்தி ,கே.டி .கே.தங்கமணி ,தி.மு.க.தலைவர் அறிஞர்  அண்ணா , நாவலர் நெடுஞ்செழியன் ,மதுரை , முத்து போன்றோருடன் நட்புபூ ண்டொ ழுகினார். 

No comments:

Post a Comment