Wednesday, December 12, 2012

சீர்திருத்த செம்மல்.
      எங்கள் தந்தையார்  தெய்வ பக்தி நிரம்பியவர்கள்.  ஆனால்  அதே நேரத்தில்
முஉட நம்பிக்கைகளுக்கும்  மத வேறுபாடுகளுக்கும் அடிபணிபவர்  அல்லர்.  மாற்றாக அவற்றை  முழுமூச  சாக எதிர்த்து சீர்திருத்த செம்மலாக  ஆரம்ப  நாள் முதல்  விளங்கி  வருகிறார். எந்தக்கட்டத்திலும்  சாதிப்பாகுபாடோ
மதப்பாகுபாடோ அவருடைய  சிந்தனையில் கூட  தோன்றியது கிடையாது,  எந்த மதத்தினரையும்  எந்த சாதியையும்  அவர் சரிசமமாக  நடத்தி  எங்கள் வீட்டில்  உபசரிப்பார்.  இயற்கையான வழக்கமாக  அதை  
கொண்டிருந்தார்.  அதை அவர் எங்களுக்கும் கற்பித்தார்.
  என்னுடன் படித்த நண்பர்கள் பலர்  கலப்புத்திருமணம்  செய்து  கொண்ட போது  அந்த கலப்பு த்திருமண ங்களை நானே முன்னின்று நடத்த வேண்டியவனா னேன். 

No comments:

Post a Comment