Friday, December 7, 2012

விளைவாக் க லிம்கள் ஆசிரியர் திரு.கி.வா.ஜ. , அகிலன், கல்கி திரு கிருஷ்ணமூர்த்தி சுத்தானந்த பாரதியார் புரட்சி கவிஞர் பாரதிதாசன் ,
தீபம் நா.பார்த்தசாரதி போன்றவர்களுட ன் நட்பு ப்பூண்டு  உறவாடினார்.. 
எங்கள் அன்னையார் காலமான சோகத்தில் எங்கள் தந்தையார் ஆழ்ந்து
இருந்த போது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மதுரைக்கு வந்து சில நாட்கள் எங்கள் இல்லத்திலேயே தங்கி ஆறுதல் கூறியது இன்னும் என் நினைவில் நிற்கிறது.
      மதுரையில் பெருந்தமிழ்த்தொண்டு புரிந்த கருமுத்து தியாகரசச்செட்டியார்
குடும்பத்துடன் எங்கள் தந்தையாருக்கு நெருங்கிய நட்புறவு இருந்தது. கருமுத்து அவர்களின் துணைவியார் (திருமதி) இராதா தியாகராசன் ,புதல்வர்கள் கருமுத்து தி.சுந்தரம் கருமுத்து தி.மாணிக்கவாசகம், கருமுத்து தி.கண்ணன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல்வேறு தமிழ்ப்பணிகளில் இக்குடும்பத்தாரும் எங்கள் தந்தையும் ஒன்றுபட்டு நின்றனர்.
       அதைப்போலத்தமிழ் நாடக உலகிலும் திரையுலகிலும் கொடிகட்டிப்பறந்த
திரு.எம்.எம்.தண்டபாணி தேசிகர் ,எங்கள் இல்லத்திலேயே ஒரு பகு
தியில்  வாழ்ந்தார். 

No comments:

Post a Comment