Saturday, December 8, 2012

டி .கே .எஸ்.சகோதரர்கள் ,திருமதி .எம்.எஸ்.சுப்புலட்சுமி  ஆகியோரிடமும்       எ ங்கள் தந்தையாருக்கு அளவு கடந்த அன்பும் நட்பும் இருந்தது. அந்தக்காலத்தில் நாடக உலகில்  சிறந்து விளங்கிய நடிகர் எம்.எம்.சிதம்பரநாதன்,திரு.எம்.எஸ்.சக்திவேல் ஆச்சா ரியார்  இராசா சண்முகதாஸ் .திருமதிடி.எம்.கமலவேணி போன்றவரிடமும் அவர்கள் அன்பு செலுத்தினார்கள். எங்கள் தந்தை தமிழுக்காக எடுத்த அத்தனை  விழாக்களிலும் அவர்கள் அனைவரும் பங்கேற்று ச சிறப்பித்தனர். எந்த வேலை இருந்தாலும் அவற்றை எல்லாம் ஒத்திவைத்து விட்டு எங்கள்  தந்தை அழைத்த போதெல்லாம்  அவர்கள் வந்தார்கள்.
          தமிழ் அறிஞ ர்களிடம்அவர் வைத்திருந்த பக்தியின் விளைவாகவோ  என்னவோ  டாக்டர் இராசமாணிக்கனார் , அவ்வை .துரைசாமிப்பிள்ளை ,அ தற்குப்பின்னர் அ .கி.பரந்தாமனார்,டாக்டர் சிதம்பரனார் , டாக்டர் தெ .பொ.மீனாட்சி சுந்தரனார்  ஆகியோரிடம் தமிழ்க்கல்வி  கற்க என்னை அனுப்பி வைத்தார்கள். எங்கள் வீட்டில் தமிழ் அறிஞர்கள் வருவதும் போவதும் எங்கள் தந்தை அவர்களிடம் அளவளாவதும் ஆகிய அப்போது அவர்களுக்க்ரிய  சிறிய தொண்டுகளை செய்யும் பேறு எனக்கும் என் சகோதரர்களுக்கும் சிறு வயதில் கிடைத்தது. அந்த இனிய நாட்களை இன்றைக்கும் மறக்கவே முடியாது.
          எங்கள்  அன்னையும் கொஞ்சமும் முகம் கோணாமல் சளைக்காமல்
வருகை தரும் தமிழ்  அறிஞர்களுக்கு  விருந்தோம்பும் தொண்டினை த தொடர்ந்து செய்த வண்ணமே இருப்பார். தமிழ் மணம் நிறை ந்த சூழலிலே
 எங்களை வளர்த்தது தான் எம் தந்தை  யார்  எங்களுக்கு அளித்த பெருஞ்செல்மா கு.ம.

No comments:

Post a Comment