Saturday, January 8, 2011

கலைத்தந்தை-சோ. இராசா சண்முகம்

நாயினும் கீழாய் செந்தமிழ் நாட்டார் நலிவதை ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி யான் கண்டு உழைத்திட நான் தவறேன். என்ற பாரதிதாசன் மனிமொழிக் கேற்ப தமிழ் மொழி தமிழ்மக்கள் தமிழ்நாடு என்று அவற்றின் உயர்வுக்கு வழி கோல அயர்வில்லாமல் தமிழ்நாடு பத்திரிகை நடத்தினார். காரணம் அவர் நோக்கும் போக்கும் எழுத்தும் சொல்லும் தமிழின் வளர்ச்சி என்ற முல்லைக்கொடியினை த்தழுவி இருந்தது. தமிழ்நாடு ஞாயிறு மலர் ஒவ்வொரு இதழும் செங்கரும்பு தித்திக்கும் தேன்கூடு தெவிட்டாத முக்கனிச்சாறுவண்ணப் பூந்தோட்டம் வாசமலர்க்கூட்டம். வற்றாத ஜீவநதி. செந்தமிழே உயிரே நறுந்தேனே செயலின் மூச்சினை உனக்கு அளித்தேனே என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கண்ட உயர் லட்சியத்துக்கு உதாரணமாக கடைசி வரை தமிழ் ப பணியினை த தொடர்ந்த கலைத்தந்தையை எளிதில் மறக்க முடியுமா. ......

No comments:

Post a Comment