Sunday, January 9, 2011

கீ .ஆ.பே. விசுவநாதம்

வாழ்த்தக் கேட்பின் தாழ்த்திக்கொள் என்பது கி.ஆ.பெ. வின் பொன்மொழி.
பிறர் கலைத்தந்தையை வாழ்த்தினால் ஆரவாரமில்லாமல் அடக்கமாகவே இருப்பார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்ற படி தொழில்மேதை ஜி.டி. நாயுடு அவர்களைப்போல் கடும் உழைப்பில் நம்பிக்கை கொண்டு உழைப்பால் உயர்ந்தார். தெய்வபக்தி மறைந்தாலும் குறைந்தாலும் நாடு சிறக்காது எத்தனை வளம் பெருகினாலும் அது நிலைக்காது. தெய்வபக்தி இல்லாத மக்கள் விலங்குக்கு நிகராவார். போலி பக்தியினால் தான் உண்மை பக்தி கேலிக்கு இடமாக அமைந்தது என்ற ஹிடமான எண்ணத்துடன் தூய சமய உணர்வுடன் வாழ்ந்தார் நமது கலைத்தந்தை.

No comments:

Post a Comment