Sunday, January 9, 2011

சோ.இராசாசண்முகம்..........

இளைஞர்களின் ஆர்வத்தை வளர்த்ததுடன் தமிழ் ஆய்ந்தோரின் ஆராய்ச்சியை தெளிந்து அறிந்து தமிழ் வளர்த்தார். சைவமும் தமிழும் தழைத்து இனிது ஓங்க அயராது உழைத்தவர். நல்ல தமிழுக்கு நவசக்தி தமிழ்ப்பெரியார் திரு.வி.க. நடத்திய பத்திரிகை என்பார்கள் முன்னோர்கள். அதே போன்று தமிழ்நாடு நாளிதழ் மூலம் நல்ல தமிழில் செய்தித்தாளை நடத்திக்காட்ட முடியும் என்று நிரூபித்தவர் கலைத்தந்தை. அவர் இலங்கையில் தொழிலாளர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். பிற்காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கட்கு வேலை வாய்ப்பினை தந்து தொழிலை எழில் பெறச்செய்தார்.

மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் தெய்வ வழியுண்டு தீமையைப் போக்கும் விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு -குறைவில்லை என்ற தீர்க்கதரிசி பாரதியின் வாக்கை மனப்பூர்வமாக நம்பினார். அதன் வழி நடந்தார். வெற்றியை பெற்றார். பெருமையும் உற்றார். கலைத்தந்தையின் லட்சிய வழியை த தொடர்வோம் . நாட்டுக்கு நல்வழி காண்போம்.

No comments:

Post a Comment