Sunday, January 9, 2011

கருமுத்து தியாகராசர்

பெரும் செல்வராக இருந்த போதிலும் அவரிடம் பணிவு என்றும் நிலைத்து இருந்தது. பெருக்கத்ஹு வேண்டும் பணிவு என்ற வள்ளுவப்பெருந்தகையின் கொள்கையை இறுதிவரை லட்சியமாக கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் காந்தியிடனும் காங்கிரஸ் இயக்கத்திலும் தொடர்பு கொண்டு பணிபுரிந்தார். காந்தியவர்கள் கருமுத்து இல்லத்தில் அரை ஆடை அணிந்தார்கள். அவர் அன்றும் பிறகும் விரும்பியிருந்தால் வளைந்து கொடுத்து இருந்தால் பல பதவிகள் அவரைச்சரண் அடைந்திருக்கும். காலத்திற்கு ஏற்றவாறு நீதியை கொள்ளுதலும் தள்ளுதளும்செய்தல் வேண்டும் என்ற பண்டித மணியின் வாக்கினை ஏற்று அதன் படி வாழ்ந்தார்.

No comments:

Post a Comment