Saturday, January 8, 2011

சோ. இராசா சண்முகம்

கடுஞ்சொல் அறியார் காட்சிக்கு எளியர் என்பது வெறும் புகழுரை அல்ல. வாழ்வில் நாம் கண்ட மறுக்கமுடியாத உண்மையாகத் திகழ்ந்தவர். காலா என் காலருகே வாடா என்று யமனுக்கு அறைகூவல் விடுத்து பாரதி சொன்னது போல தன்னம்பிக்கை கொஞ்சமும் குறையாமல் துன்பங்கள் அணிவகுத்து சூழ்ந்த போதும் துணிவுடன் வாழ்ந்த வீரர் அவர். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று கற்றதோடு விட்டு விடாமல் கடைப்பிடித்து லட்சிய வாழ்க்கைப்பாதை அமைத்துக்கொண்டார். புகழை நாடி அவர் ஓடியது இல்லை. புகழ் அவரைத் தேடி குவிந்தது. எனவே இயற்கையான நிலைத்த புகழுக்கு உரியவர் ஆனார்.

No comments:

Post a Comment