Wednesday, March 27, 2013

ஐந்தறிவா   ஆறறிவா? மஞ்சரி 1981 ஜூலை  சுவையான நிகழ்ச்சிகள் . 1936ஆம்ஆண்டு நான் தேக்கடி சப் போஸ்ட்மாஸ்டராக ப பணியா ற் றி  க் கொண்டிருந்தேன் . அப்பொழுது நான்  சிறிய குட்டிச் சடை நாய்  ஒன்றைப் பிரியமாக வளர்த்துக்கொண்டிருந்தேன்  அந்த நாய்க்குட்டிக்கு  வாய்தான் பேச முடியாதயொழீய,மற்ற படி கூர்மையான அறிவு உண்டு.  விசுவாசம் மிக்க பிராணியாகவும் இருந்து வந்தது. அந்த மலைப்பிரதேசத்தில் எனக்கு அந்த நாயும் நாய்க்கு நானும் ஒருவருக்கு ஒருவர்  துணையாக இருந்தோம். இரவிலோ பகலிலோ   தபால் காரர் அல்லது மேற்பார்வையாளர்  அவர்களை அழைத்து வரவேண்டும்  என்றால்  அக்குட்டியை   பப்பி  தபால்காரரைப் போய்க் கூட்டி வா என்றால் போதும்  சுமார் இரண்டு பர்லாங் தூரத்தில் உள்ளவரிடம் சென்று  அவர் முன்னால் இரண்டு முறை குத்து விட்டு திரும்பி விடும். அவரும்  குறிப்பறிந்து  அலுவலகம் வருவார்.   .     
         இரவு படுக்கச்செல்லும் முன் என் கட்டிலுக்கு  அடியில் உள்ள காலி இ டத்தில் அந்த நாய்குட்டிக்கு  அலுவலக அறையில் இருந்து  தபால் கட்டுடன்  இரண்டு கான்வாஸ்  பைகளை த்தான் வாயினால்  இழுத்துக்கொண்டு வரும்  ஒன்றை ஹரியில் விரித்து கொள்ளு.ம். மற்றொன்றை வாயினால் இழுத்து  மேலே போர்த்துக் கொண்டு  படுத்து தூங்கும். இரவு சிறு நீர் க்கழிக்க வேண்டி இருந்தால் எழுந்திருந் து வாசற்கதவை தி திறந்து வெளியே விட்டு விட்டு கதவை சும்மா சாத்தி விட்டு படுக்கையில் படுத்து விடுவேன். ஏனென்றால்  அது திரும்பி வரச் சிறிது நேரம் ஆகும். என் தூக்கம்  கலைந்து  விடும் என்பதற்காகவே திரும்பப்படுத்து தூங்க்கி விடுவே.ன். அந்த குட்டிக்கு  தாழ் போடாமல் சாத்தியிருக்கும்  கதவை தலையினால் முட்டி வந்து என் காலை சுரண்டி மீண்டும் எழுப்பும். நான் எழுந்து வாசல் கதவைத் தாழ் போட்டால் ஒழிய  மறுபடியும் படுத்து தூங்காது. இதை விட புத்திசாலியான  செயல் என்னவென்றால்  மறுநாட் காலை எழுந்ததும்  முதல் வேலை அலுவலக அறையில்  இருந்து எங்கள் விடுதிக்கு இரவில்  எடுத்து  வந்த  இரண்டு கான்வாச்களை  பைகளையும்  மீண்டு வாயுனால் இழுத்து ச சென்று  முன்பு இருநத இடத்தில் வைத்து விட்டுத்தான் மறு வேலை பார்க்கும். நம் குடும்பத்தில் உள்ள சிறுவர்கள்  கூட தங்கள் படுக்கைகளை சுருட்டி வைப்பது இல்லை  எனதை அறிவோம். ஐயறிவு படைத்த இந்த நாயின்  செயலைப பாரத்து  நானும் நண்பர்களும் வியப்பு அடைவது உண்டு.  எக்காரணங் கொண்டும்  அடுப்பங்கரைக்குள்  வரவே  வராது. அதற்கான ஆகார  வகைகளை  தட்டில் போட்டு  சாப்பிடு என்று சொன்னால் தான் சாப்பிடும்.   

No comments:

Post a Comment