Friday, November 30, 2012

கழித்தோம  என்பது தெரியாமல் பல செய்யுட்களைச சுவைபட ச சொல்லி  அவற்றின் அரிய  கருத்துகளையும் மனத்தில் என்றும் நீங்காது  நிலைத்து இருக்குமாறு  எடுத்துக்கூ றுவார்.  நல்ல நகைச்சுவைகளை ச சொன்னால்  மனம் திறந்து  வாய் விட்டு ச சிறுத்து விடுவார்.
      ஆங்கிலேய ஆசான்கள்  பலரிடம்  அவர்  ஆ ங்கிலம் கற்றதால்  மேலை நாட்டில் படித்தவர்களின் பாணியிலேயே  ஆங்கிலம் பேசுவார். இங்கிலாந்தில்
இருந்து வந்த வெள்ளைக்காரர்களும் அவர் பேச்சைக் கேட்டு வியந்து  அவர் ஆக்ஸ் போர்டில்  படித்தவரா என்று  என்னைக் கேட்டதுண்டு.
  கடைசி வரை நல்ல கையெழுத்தில் அச்செழுத்து ப போலவே துல்லியமாக எழுதுவார். 
       பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் பாலி டெக்னிக்குகளையும் கோடிக்
கணக்கில்  செலவிட்டு ஏற்படுத்திப பல்லாயிரக்கணக்கான  மாணவ மாணவிக ளை க் கல்வி  நலம் பெற்றுய்ய  வழிவகுத்த  அம்மாபெரும்  வள்ளல்
கலைத்தந்தை  எனப் போற்றிபுகழப்படுவது  சாலப்  பொருத்தமே கல்விக்காக . 
அவர் செய்த  செலவில்  ஒரு சின்னஞ் சிறிய  பகுதியை ச செலவிட்ட பலரை  ஆட்சியாளரும்  பலகலைக்   கழகத்தாரும்  பட்டங்கள்  வழங்கி கௌரவித்தனர். இவ்வுயர்ந்த  மனிதரை  அவர்தம்  வாழ்நாளில்  கௌரவப்படுத்த  அவர்கள் முன் வராதது. இந்நாட்டின்  அவல நிலையையே  காண்பிக்கின்றது.  
       பட்டம் பதவிக்கு  ஆசைப்பட்டு  அவர்  செலவு செய்தாரில்லை. எனினும்  ஆட்சியாளரும்  பல்கலைக்கழகத்தாரும் பட்டங்கள் 

No comments:

Post a Comment