Tuesday, January 2, 2024

K.k.நகரில் அண்ணன் சந்திரபால் வீட்டில் இருந்து அரசின் போக்கினைக்கண்டித்து அறிக்கைகள் எழுதி வைப்பார் நெடுமாறன். அதனை மாலைமுரசு அலுவலகத்தில் சேர்த்து விடுவேன்.எல்லா பத்திரிகை களும் வெளியிட்டன. தல்லாகுளம் பெட்ரோல் பங்கில் சிங் வேடமிட்டு நெடுமாறன் கட்சிக்காரர்களை சந்திப்பார்.கோரிப்பாளையம் கவுன்சிலர் வேலாயுதம் முக்கியமானவர். மந்தித்தோப்பு மணிக்கட்டி சுவாமி தங்கராஜ் செல்லூர் காமராசு பாண்டுரங்கன் குறிப்பிடத்தகுந்தவர்கள்.தெற்குவாசல் மாணிக்கம் மதுரை வீரன் கோவில் ச பிச்சைக்கணபதி முன்னணி வீரர்கள் கலைஞரின் ஆட்சி. பத்திரிக்கைகள் மதுரை குறிஞ்சி நெடுமாறன் கட்டபொம்மன் ரவுண்டானாவில் தப்பி ஓட முயற்சி என தலையங்கம் எழுதின காலமது. மதுரை முத்துவிற்கும் நெடுமாறன் அவ்ர்கட்கும் பனிப்போர் நடந்தது.கலைஞர் டென்ஸன் ஆனார். தா.கிருஷ்ணன் வடக்குமாசி வீதிக் கூட்டத்தில் உட்கட்சிப்பூசலின் விளைவாக தப்பி வந்தேன் என அலறினார். கலைஞரைத்தூங்க விடாமல் ஆட்டங்காட்டினார் நெடுமாறன். ஒருநாள் சந்திரா டாக்கீஸ் படம் முடிந்து மக்கள் செல்கையில் 291 மேலமாசி வீட்டின் சுவர்மீது ஏறி தி.மு.க முத்துவின் ஆட்கள் மாடிவழியே உள்ளே குதிக்க முயன்ற னர். கோழிக்கண்ணன் குரூப் சோடாபாட்டிலை வீசி ரவுடி களை விரட்டினர் காவலுக்கு வந்த போலீஸ் இடையில் மாட்டிக்கொண்டனர். கதவைத்திறந்து அனுமதி த்து போலீஸ்காரர்களைக்காப்பாற்றினோம். நெடுமாறன் வீட்டிற்கு காவல் வந்த காவல்துறை அதிகாரி நன்றி தெரிவித்தார் த மங்கம்மா சத்திரம் பெரியார் நிலையம் அருகே கைது செய்யப்பட்ட நெடுமாறனுக்கு மேலமாசி வீதி அக்கா நாகம்மை சொக்கலிங்கம் அவர்கள் தந்த உணவை SP கந்தசாமி அவர்கள் அனுமதி பெற்று பரிமாறினேன்.மதுரை ஜெயிலில் விஸ்வநாதன் அண்ணன் கல்யாணி மதினி கவனித்துக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment