Sunday, April 7, 2013

homage P.T> Kamalathiagarajan

மதுரை திருவள்ளுவர் கழக புரவலர்  கமலா தியாகராசன்    அவர்கட்கு  நினைவு   அஞ்சலி.
  கோவையில் இருந்து  மதுரை சென்று  எவ்விதமான முன் அனுமதியின்றி உயர்திரு கமல தியாகராசன்  அவர்களை  சந்திக்க  அவரது மாளிகைக்கு சென்றேன். வாசல்   காப்போர் முதல் வழியில் சந்தித்தோர் வரை  அவர் இருக்கும் மாடி அறையை கே காட்டினர்.  அங்கு சென்றதும்  நான் அவரை சந்திக்க வந்த நோக்கத்தை சுருக்கமாக கூறினேன். புலவர் திரு இராமச்சந்திரனை சந்திக்க சொன்னார். புலவரும் ஆவன  செய்து கொடுத்தார். திருவள்ளுவர் கழகத்தில் திருக்கு றள்  ஆய்வு  மையம் உள்ளது. அறநெறியண்ணல்   கி.பழநி ய ப்பனார்  திருமதி இராதா தியாகராசன் திரு பழ .கோமதிநாயகம்  அவர்களது குடும்பத்தார் சார்பாக லட்சக்கணக்கான  தொகை  நன்கொடையாக  வழங்கப்பட்டு செவ்வனே நடைபெற்று வருவதை தமிழ் பேசும் மதுரை அன்பர்கள் அறிவார்கள். புரவலர்கள் தோன்றட்டும். தமிழறி ர்கள்  வளர  திருவள்ளுவர்  கழகம்  செழிக்க வேண்டும்.    

No comments:

Post a Comment