Wednesday, February 1, 2012

*pasam*


                                                 பாசம்
தரணியில் தரிக்கும் போதே வரும் தாய்பாசம்
தரணியில் தலை நிமிர்ந்து நடக்கவைக்கும் தந்தை பாசம்
தான்  ஆடாவிட்டாலும் ஆடிவரும் தனது உடன்பிறப்புகளின் பாசம்
தான் என்ற நிலை வந்தவுடன் துணையின் பாசம்
தனக்கென்று குழந்தைகள் ஆனவுடன் பிள்ளையின்  பாசம்
தனக்கென்று ஒரு துணை வரும் வரை அப்பிள்ளையின் பாசம்
தான் தோன்றியாய் இருந்தால் இல்லை இப்பாசம்
தன் பிள்ளைகளின் பிள்ளைகள் மேல் தனிப்பேரப்பிள்ளை பாசம்
தரணியில் இருந்து பாசக்கயிறு இழுக்கும்போதும் பாசம் .

மரு.கோமதி அழகப்பன்  தனது பேரன் சூர்யாவிற்கு எழுதிய பாடல்

No comments:

Post a Comment