Wednesday, September 16, 2009

திருவேங்கட ramanujam

இளமுருகன்.
வழி வழியாய் வந்த வள்ள்ல் குணம்
கவி மொழியில் உதித்த துள்ளல் மனம்
ரவி ஒளியில் நலம் பெற வாழ்த்தும் விதம
புவி உணர்த்த புண்ணியனின் நேர்த்தி காணீர!
பற்றானார் சொற்கேட்பார் சோராது இருக்க் விழா
உற்றார் முன் உயருள்ளம் காட்டி உய்ர்ந்த விழா
மாசற்ற மன்னர் மதிப்பைக் கூட்டிய மாபெரும் விழா
ஆரீரோ தாலட்டிய தாய் முன் யாராரோ பாராட்டும் விழா!
குறியால் வருவன கூறும் குழந்தைக்கு விழா
சிறகொடிந்த கிள்ளையை சீராட்டித் தூக்கும் விழா
தாயுமானவர் வாக்கைத் தகவாய்க் காக்கும் தம்பிக்கு விழா
தஙுகுதடை தோன்றாமல் உள்ளவர்க்கு தரணி போற்றும் விழா!
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்ணிசைத்துப் பாடிய பொன்விழா
பிரசீத்தா பாடி பிரசித்தமான பார்த்த ஞாபகம் இல்லையோ?
மாறனும் பிரசீத்தாவும் இணைந்து"ரோஜா மலரே"யின் ரீங்காரம்
தோள் தூக்கி வளர்த்த பிள்ளை"ராஜயோகம் "பாடிய யோகம்.

கண்வன் மனைவி கானம் கேட்டு க் கரவொலி எழுந்தது
பாடும் பறவைகள் பாட்டொலி பரவசப்புளகாங்கிதம் பரப்பியது
பாடிய பைங்கிளிகளின் பரஸ்பரம் பளிரென மனதில் பட்டது
பட்சி சாதி போலப் "பட படவென" பாடினீர் பைந்தமிழ்ப் பாவலரே!
பிற‌வியிலே குறையுற்றான் பிள்ளை யொருவ‌ன்
க‌ல‌ங்குகிறார் அவ‌னை நெஞ்சில் நிறுத்தி
ஆசையிலே அவ‌னுக்கோர் விழா எடுத்தார் அவ‌ர்
அவ‌ர் அன்புக்கோர் எல்லையில்லை செய்து முடித்தார்!
க‌ண்ணில் க‌ண்ட‌தெல்லாம் விழாவா ம‌னித‌நேய‌மா?
விழாவில் பேசிய‌தெல்லாம் உள்ள‌மா உரைக‌ல்லா!
துன்ப‌த்தில் ஒரு சொல்லினைச் சொல்லி சிரிக்க‌ச்செய்வான் க‌ண்ண‌ன்
துய‌ர‌த்தில் ஒரு விழாவினை ந‌ட‌த்திச்சிந்திக்க‌செய்தார் மீனாக‌ள்ள‌பிரான் பிரசீத்தாமாற‌ன் ஹ‌ரீணீ. typed by s.elamurugan on20.7.09 and uploaded.
sent to puduyugan@yahoo.com


Love Cricket? Check out live scores, photos, video high

No comments:

Post a Comment